யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 60 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸாரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த கஞ்சா பொதிகள் நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளன.