அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சு.முரளீஸ்வரன் தலைமையில் உலக வாய்ச்சுகாதாரம் பேணுதல் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஜே.மதன், பற்சிகிச்சை வைத்தியர்கள், தாதிய பரிபாலகி, தாதிய உத்தியோகத்தர்கள்
மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சை பிரிவின் சிறப்பு, பற்சுகாதாரம் பேணுவதன் நோக்கம், வாய் புற்றுநோய் தொடர்பில்
பற்சிகிச்சை பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர். ஏ.வகைடின் தெளிவுபடுத்தினார்.