இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை,
நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில், இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் கல்முனை பிரதேச பொறுப்பாளர் தர்மராஜின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதுடன்,
கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர் அமலதாசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நற்பிட்டிமுனை பல நோக்கு கூட்டுரவு சங்க தலைவர் சிறிவேல்ராஜா இரா.குணசிங்கம், நற்பிட்டிமுனை சமய செயற்பாட்டாளர் சிசுபாலன், இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் வரதராஜன் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது, 73 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது