29 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இதுதானா ‘தமிழர் ராஐதந்திரம்’

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது முன்னாள் இராணுவத் தளபதியும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கும் கருத்து தமிழர் ராஜதந்திரத்தின் பரிதாப நிலைமையை தெளிவாக எடுத்துரைக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் கடைசி மகனான பாலச்சந்திரனும் ஒரு பயங்கரவாதிதான் என்றும் குறிப்பிட்டிருக்கும் பொன்சேகா, பாலச்சந்திரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறுவர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட வேண்டிய ஒருவர் என்பதே பொன்சேகாவின் வாதம். இங்கு விடயம் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பானதல்ல. விடயம் தமிழ் தலைவர்களின் அரசியல் ஆளுமை தொடர்பானது.

இன்று நாடாளுமன்ற விவாதங்களை அவதானித்தால் ஒரு விடயத்தை தெளிவாக காணலாம். அதவாது, தமிழர்கள் கடந்த காலத்தில் எவரையெல்லாம் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்களோ, எவரையெல்லாம் நம்பி வாக்களித்தார்களோ அவர்கள்தான் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான பிரச்சாரங்களை செய்கின்றனர். 2010இல் சரத்பொன்சோவிற்கு வாக்களிக்குமாறு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் மக்களை கோரியது. இத்தனைக்கும் முள்ளிவாய்க்கால் அகோரம் இடம்பெற்று ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை. அவ்வாறானதொரு சூழலில் அந்த யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதிக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு சம்பந்தன் கோரினார். இன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் அப்போது சம்பந்தனுடன்தான் இருந்தனர்.

இன்று அதே பொன்சேகாதான் தமிழர்களுக்கு எதிராக மோசமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார். இதே போன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அதனை புறம்தள்ளி சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு சம்பந்தன் – சுமந்திரன் தரப்பின் கூட்டமைப்பு கோரியது. ஆனால் இன்று அதே சஜித் பிரேமதாசவின் அணியினர்தான் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் வாதங்களை எதிர்ப்பதில் முழுமூச்சுடன் செயற்படுகின்றனர். ராஜபக்சக்கள் பக்கத்தை அனைவரும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கள – பௌத்த இனவாதமோ எதிரணியினர் பக்கத்திலிருந்தே ஆவேசத்துடன் வெளிவருகின்றது.

நாங்கள் ராஐபக்சக்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை காட்டுவதே பொன்சேகாவினதும், சஜித் தரப்பினதும் அரசியல் அணுகுமுறையாக இருக்கின்றது. இவர்களுக்கு ஒரு வேளை தமிழர்கள் வாக்களிக்காதிருந்தால் இது தொடர்பில் பேச வேண்டியதில்லை. ஆனால் தமிழர்கள் நம்பி வாக்களித்தவர்களே இவ்வாறு நடந்து கொள்ளும் போது, அது தமிழர் தலைமைகளின் அரசியல் ஆளுமைக் குறைபாட்டையே தெளிவாக எடுத்தியம்புகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூரநோக்கற்று அரசியல் முடிவுகளை எடுத்திருக்கின்றது என்பதையே இந்த விடயங்கள் தெளிவாக உணர்த்துகின்றது. இத்தனைக்கும் சம்பந்தன் அவ்வப்போது தாம் ராஜதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறிக்கொள்ளும் ஒருவர். சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்களை இப்போதும் சிலர் படித்தவர்கள், விடயமுள்ளவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது. இதுதானா அவர்களின் படிப்பு – இதுதானா சம்பந்தனின் ராஜதந்திர ஆற்றல்? பொல்லை நாங்களே கொடுத்துவிட்டு ஒருவரிடம் அடிவாங்குவதா தமிழர் ராஜதந்திரம்?
-ஆசிரியர்

Related Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...

அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று...