32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தியாவிற்கு நன்றி கூறிய இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவியை பெறுவதற்கு அவசியமான உத்தரவாதத்தை வழங்கியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் அளுநர் நந்தலால் வீரசிங்க இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அவசியமாக தேவைப்படுகின்ற 2.9 மில்லியன் டொலர் கடனுதவியை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியமைக்காகவே அவர் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா தேவையான அனைத்து உத்தரவாதங்களையும் வழங்கியுள்ளது என நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர், எனினும் சீனா வழங்கிய உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். பாரிஸ் கிளப் மற்றும் சீனா உட்பட ஏனைய கடன்வழங்குநர்கள் உத்தரவாதம் வழங்கும் நிலையில் உள்ளனர் என கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles