29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

சரியோ பிழையோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் தினசரி அரசியலை செய்து கொண்டிருக்கின்றது.
தமது சக்தி இவ்வளவுதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டினாலும்கூட துணிச்சலுடன் போராட்டங்களை அறிவிப்பதும் அன்றாடம் நடக்கும் விடயங்களால் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதிலும் முன்னணி தயக்கம் காட்டுவதில்லை.
மற்றைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் ஊடக அறிக்கைகள் அல்லது ஊடக சந்திப்புக்களுடன் தமது வேலை முடிந்தன என்ற பாணியில் அரசியல்
செய்துகொண்டிருக்கின்றன.
அதுபற்றி சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பத்தியிலும் தெரிவித்திருந்தோம்.
அதனால்தான் என்று நாம் சொல்லப்போவதில்லை, ஆனால், திடீரென்று நித்திரையிலிருந்து எழும்பியதுபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியினர் தமது மத்திய குழுவைக் கூட்டி இன்றைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், அடுத்த வருடம் நடக்கவிருக்கும்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரைக் களம் இறக்குவதென்றும் முடிவெடுத்திருக்கின்றனர்.
பொதுவேட்பாளரை களமிறக்கும் முயற்சியை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சில அரசியல் மதியுரைஞர்கள் குழு ஒன்று முயற்சி செய்ததும் அது
தோல்வியில் முடிந்ததும் நாம் மறந்துவிட்டவை அல்ல.
ஆனால், அவர்கள் அப்படியொரு முயற்சியை எடுத்தபோது அது சரியான முயற்சி என்று நாமும் பாராட்டியிருந்தோம்.
அந்த முயற்சியில் இறங்கியவர்கள் மிகக்குறுகியகால இடைவெளியில் அதனை ஆரம்பித்தது தான் அந்த முயற்சி வெற்றிபெறாமல்போனதற்கு முக்கிய காரணம்
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்று மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை நாம் எதிர்கொள்ளவிருக்கின்றோம்.
அதுவும் தெற்கில் ஒரு பலமான வேட்பாளர் ஒருவர் இதுவரை காணப்படாத நிலையில் பல வேட்பாளர்கள் களம் இறங்கலாம் என்று ஆரூடம் கூறப்படும் நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகள் அடுத்த தேர்தலில் வெற்றியைத்தீர்மானிக்கின்ற வாக்குகளாக இருக்கும் என்று நம்பப்படுகின்ற ஒரு சூழலில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் பலரின் கவனத்தையும் பெற்றிருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் ஊர்க்குருவியும் இந்தப் பத்தியில் அப்படியொரு யோசனையை முன்வைத்ததுடன் அதற்கு பொருத்தமான வேட்பாளர்
சம்பந்தன் ஐயாதான் என்றும் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
தந்தை செல்வா எப்படி தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு தமிழீழம்தான் என்பதை கூறி விட்டு அதற்காக மக்கள் ஆணையைப் பெறுகின்ற வகையில் தேர்தல் ஒன்றைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தாரோ, அதேபோல தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை சமஷ்டி கட்டமைப்பைக் கொண்ட ஓர் அமைப்பு முறை
தான் என்பதை ஒரு தேர்தல் மூலம்- அதாவது ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு போல இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றும்,
சம்பந்தன் காலத்தில் தீர்வு சாத்தியமாகாது விட்டாலும் அவர் காலத்தில் தமிழ் மக்களின் விருப்பத்தை உலகறியச் செய்கின்ற வகையில் இந்த
ஜனாதிபதி தேர்தலை அவர் பயன்படுத்த வேண்டும் என்றும் அப்போது இந்தப் பத்தியில் எழுதியிருந்தோம்.
இப்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு- அதிலுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்கள்கூடி அத்தகைய முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால், அவர்கள் அந்த முடிவை செயல்படுத்துவதை நோக்கி அர்த்தபுஷ்டியுடன் பயணிக்கவேண்டும்.
அதற்கு தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கும் அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சிக்க வேண்டும்.
முக்கியமாக தமிழரசுக் கட்சியையும் அதன் பெருந்தலைவர் இரா. சம்பந்தனையும் அணுகி அவரின் சம்மதத்தைப் பெற முயற்சிக்கவேண்டும்.
அவர் போட்டியிட விரும்பவில்லை என்றாலும் அவர் சம்மதத்துடன் ஒருவரை வேட்பாளராக தெரிவுசெய்ய வேண்டும்.
அவர் போட்டியிடுவது இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாவதற்காக அல்ல தமிழ் மக்கள் தமது பிரச்னைகளுக்கு தீர்வாக இந்த நாடு ஒரு சமஷ்டி
கட்டமைப்பின் கீழ் இருக்க வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம்- அதாவது இந்த ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பாகக்
கொண்டு தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்ளவேண்டும்.
அவ்வாறு பொதுவேட்பாளர்களம் இறங்கும் நிலை வரும்போது, தமிழ் மக்களின் வாக்குகளுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் எம்மை- எமது வேட்பாளரை நாடி வருகின்ற ஒரு நிலைமை ஏற்படலாம்.
அதனை எமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த யோசனையை வழமைபோல தமிழ் அரசியல் கட்சிகள் வெறுமனே கடந்து செல்லக்கூடாது.

-ஊர்க்குருவி.

Related Articles

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி! குடும்பத்தினருக்கு கிடைத்த சோகமான செய்தி!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம்இ...