இரணைதீவில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் : 6 மில்லியன் ரூபா அபராதம்! : நீதிமன்றம் தீர்ப்பு

0
17

கிளிநொச்சி இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவர்களுக்கும், 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 8 மாத கால சிறைத் தண்டனையும் விதித்து, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி அதிகாலை, இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று, மீண்டும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்த முதலாவது குற்றச்சாட்டுக்கு, 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பில், 8 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, 8 மாத கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.