29 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் சீன உயர்மட்டக் குழு

இலங்கை கொரோனாவின் மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டிருப்பதான அச்சம் எழுந்திருக்கின்ற சூழலில், சீனாவின் அதியுயர் குழுவொன்று, இலங்கையில் தரையிறங்கியிருக்கின்றது. சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jicchi தலைமையிலான 26 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு இலங்கையில் தரையிறங்கியிருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க தூதுவர் தெரிவித்த கருத்துக்களுக்கு சீனத் தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு சூழலில், சீன உயர்மட்டக் குழுவின் விஜயம் அரசியல் ரீதியில் அதிக முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படலாம். இந்தக் குழுவினரின் சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை சீனாவிடம் எதிர்பார்க்கும் 1.2 பில்லியன் கடன் தொகையின் இரண்டாவது பகுதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் கடன் தொகையின் முதல் கட்டமான 500 மில்லியன் தொகை இந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டது.

சீனாவிற்கு எதிரான உலகளாவிய அமெரிக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. அண்மையில் சீன அரசிற்கு சொந்தமான 24 நிறுவனங்களை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தடைசெய்திருந்தது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களில், கொழும்பு துறைமுக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீன பொறியியல் நிறுவனமும் அடங்கும். சீன அரசு, கட்டுமானம் என்னும் பெயரில் அதன் ஒரு பாதைத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. சீனாவின் திட்டங்கள் இரகசிய நோக்கம் கொண்டவை. அவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை. கட்டுமானத் திட்டங்களை ஒரு ஆயுதமாகவே சீனா பயன்படுத்தி வருகின்றது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே சீனாவின் நிறுவனங்கள் மீது தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்சியாகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா, இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவு வெளிப்படைதன்மை மிக்கதாக இருக்குமாயின், அதனை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் சீனாவிற்கும் – இலங்கைக்குமான உறவில் வெளிப்படைத்தன்மை இல்லை – அது சந்தேகத்துக்குரிய என்னும் கருத்தையே மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன் காரணமாகவே இலங்கைக்கான சீனத் தூதகரம், அமெரிக்க தூதுவரின் கருத்தை கடுமையாக ஆட்சேபித்திருக்கின்றது. அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் ராஜதந்திர நடைமுறைகளை மீறிவிட்டது – இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் இலங்கை மக்களுக்குரியது. அதில் தலையீடு செய்ய அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமுமில்லை என, சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே சீனா வழங்கிய கடன்களுக்கு பதிலாகவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் ஊழலும் மோசடிகளும் இடம்பெற்றதாக இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே விமர்சித்திருக்கின்றார். இவ்வாறானதொரு சூழலில்தான் ராஜபக்சக்கள் மீளவும் சீனாவிடம் கடனை பெறுகின்றனர். இது மேலும் இலங்கையை சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கவைக்கலாம் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து. ஆனால் கொழும்போ இதனை தொடர்சியாக மறுத்து வருகின்றது. அண்மையில் கூட ஜனாதிபதி கோட்டபாய புதிய வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் போது, சீனாவுடனான எமது உறவை வர்த்தக நலன்சார்ந்த ஒன்றாகவே நோக்க வேண்டும் ஆனால், இதனை சிலர் கடன்பொறியென்று வர்ணிக்க முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். சீனாவிடமிருந்து பெறும் ஒவ்வொரு கடன் தொகைகளும் இலங்கையை மேலும் சீனாவின் பிடிக்குள் தள்ளிவிடலாம். சீனாவின் பிடி இலங்கைக்குள் இறுகும் போது, இந்தியாவினதும் அமெரிக்காவினதும் பிடிகளும் இறுகலாம்.
ஆசிரியர்

Related Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...

அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று...