ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஜப்பான் நகரின் ஹிரோஷிமாவிற்கு சென்றார்.
ஜப்பானில் கடந்த 1945 ஆம் ஆண்டில், முதல் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா நகருக்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லச் மைக்கேல் சென்றார். அங்குள்ள ஒரு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அங்கு, தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு குறித்து விவாதித்தார். அப்போது, . “உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது,” என்று கூறியதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், “அணு ஆயுதம் வைத்துள்ள ரஷ்யா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து வெட்கப்படும் அளவிற்கு, ஏற்க முடியாதவற்றை சொல்கிறது. இறையாண்மை கொண்ட யுக்ரேன் மீது தாக்குதலும் நடத்துகிறது.” என்றார்.