உலக மக்கள்தொகையில் 10% போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய அவா், ‘கிராமப்புறம் முதல் நகா்ப்புறம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. உலகின் பெரும் பகுதி அபாயத்தில் இருப்பதே இதன் அா்த்தமாகும். கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து விரிவடையும். எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் வழிகள் உள்ளன. இதுவரை பலா் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிா்களை காப்பாற்ற முடியும்.
தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள் தொகையில் சுமாா் 10% போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது.
தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐரோப்பா, கிழக்கு தரைக்கடல் பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. எனினும் ஆப்பிரிக்காவிலும், மேற்கு பசிபிக் பகுதிகளிலும் நல்ல சூழல் நிலவுகிறது.
உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தாா்.
தற்போதைய உலக மக்கள் தொகை சுமாா் 760 கோடி. இதில் உலக சுகாதார அமைப்பு மதிப்பீட்டின்படி 76 கோடி போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.