26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

உழவு இயந்திரமம் விபத்துக்கு உள்ளானதில் இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்ட விபத்துக்கு உள்ளானதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் உரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம இன்று (09) பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்ச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய தவக்குமார் டிலஷன், 19 வயதுடைய ஞானசேகரன் கிளிசஷன் என்ற இரு இளைஞர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை, தாந்தமலை பிரதான வீதியில் இன்று பகல் 11 மணி அளவில் கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து தாந்தாமலை பகுதியை நோக்கி உழவு இயந்திரத்தில் 4 பேர் பிரயாணித்தனர்.

இதன்போது மணல்பிட்டி சந்திப் பகுதியில் வீதியில் வந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கு வழிவிட முற்பட்ட போது வேகமாக சென்ற உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானத்தில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த இருவரும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...

சாராஜஸ்மின் குறித்த மரபணுபரிசோதனை அறிக்கையை ஏற்கமுடியாது- அருட்தந்தை சிறில்காமினி

சாராஜஸ்மினின் மரபணுபரிசோதனைகுறித்த அறிக்கையை  ஏற்க முடியாது என அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார். சாராஜஸ்மின் என அழைக்கப்படும் புலத்சினி மகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய...

மிருசுவில் கொலை தொடர்பில் மூவர் கைது!

கொலை தொடர்பாக மகன்கள் உட்பட மூவர் கைது!! தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும்...