29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

அதற்கு மேலதிகமாக 16 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு கிடைத்துள்ளது. இந்த கொடுப்பனவு சட்டமா அதிபர் ஊடாகவே திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதன் காரணமாக நாட்டின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்காக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஏற்பட்ட செலவு மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்க இந்த பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் 02ஆம் திகதி இலங்கை கடல் எல்லையில் தீ பற்றி எரிந்தது. இதனால் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் மீனவர்களின் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

கப்பல் தீ பற்றியதால் நாட்டின் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்ற விடயங்களை ஆராய்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்ள அமைக்கப்பட்ட நிபுணர் குழு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 6.2 பில்லியன் டொலர்களை நட்டஈடாக பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்திருந்தது. அதன் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அதன்படி, தற்போது இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் சட்டமா அதிபர் ஊடாக திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி! குடும்பத்தினருக்கு கிடைத்த சோகமான செய்தி!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம்இ...