ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த ஏ.எச்.எம்.பௌசி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகிறார். ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராகக் களமிறங்குவதால் பதவியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் அவரது வெற்றிடத்துக்கு பௌசி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌசி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எச்.எம்.பௌசி அடுத்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினராகிறார்.
0
231