ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகத்துக்கிடமாக நடமாடிய குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
குருநாகல் பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 5 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான நபர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்தக் கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆர். ஏ. டி. சி. எஸ். ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.