கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திடிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (22) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 09 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது போதைப் பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும் 30,000 ரூபாய் பணத்தையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதிகஹதெனிய வீதியை சேர்ந்த 58 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கல்கஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.