இம்முறை காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ரோஜாக்கள் தோற்றத்தில் சிறியதாக காணப்படுவதாகவும் அதனைக் கொள்வனவு செய்பவர்கள் அதிகம் விரும்புவதில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.இறக்குமதி செய்யப்படும் சிவப்பு ரோஜாவிற்கு அதிக கேள்வி இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.