32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

காதலில் தோற்றுள்ளேன்; மீண்டும் காதல் வருமா எனத் தெரியாது: ஸ்ருதி ஹாசன்

காதலில் கூட தோற்றுள்ளேன். ஆனால், மீண்டும் ஒரு காதல் வருமா என்று தெரியாது என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் படம் ‘லாபம்’. இதில் நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பேட்டியளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அதில் ‘லாபம்’, சம்பளம் குறைப்பு, கரோனா அச்சுறுத்தல், காதல் தோல்வி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

அந்தப் பேட்டியில் ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாவது:

“கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால், எப்போதுமே நான் அதிகமாக சம்பளம் வாங்கியதில்லை. ஆகையால், என்னைச் சம்பளம் குறைக்க வேண்டும் எனச் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எனது வாழ்க்கையில் பல விஷயங்களைக் கடந்து தான் வந்துள்ளேன். காதலில் கூட தோற்றுள்ளேன். ஆனால், மீண்டும் ஒரு காதல் வருமா என்று தெரியாது. காதல் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம், வராமலும் போகலாம். சினிமா, இசை என மும்முரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை”

இவ்வாறு ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.

Related Articles

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு எந்த...

கொழும்பில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

கொழும்பு - ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட,...