காரை நகர் கொழும்பு தூர சேவையில் ஈடுபடும் காரைநகர் சாலைக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து கொழும்பு செல்ல யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகிய போது மாலை 4 மணியளவில் காரைநகர் பீச் ரோட் சந்தியில் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளது
காரைநகர் பீச் ரோட்டு சந்திப்பகுதியில் இனம் தெரியாத குழு ஒன்றினால் மறிக்கப்பட்டு தாக்கப்பட்டதால் பேருந்தில் சாரதியின் நடத்துனரும் காரைநகர் ஆதார வைத்திய சாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
ஏற்கனவே இந்த பேருந்து மீது இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இன்று மூன்றாவது தடவையாக குறித்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.