கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் மோதியே விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியூடாக அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.