குடிவரவு கட்டுப்பாட்டாளரின் பிணை மனு ஒத்திவைப்பு!

0
23

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பம் குறித்த உத்தரவை காலவரையின்றி ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதங்களை பரிசீலித்த பின்னர்இ பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இருப்பினும்இ நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மே மாதம் 8 ஆம் திகதி நடத்த நீதிபதிகள் அமர்வு நிர்ணயித்தது.

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஈ-விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் குற்றம்சாட்டி ஹர்ஷ இலுக்பிட்டியவை உயர் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.