கூட்டுறவாளர் வீரசிங்கத்தின் 60ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

0
18

கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் 60ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக அமரர் வீரசிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தலைமையுரை, நினைவுப் பேருரை, விருந்தினர்கள் உரை, கூட்டுறவாளர்கள் கௌரவிப்பு, மனைப் பொருளியல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் க. மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந. திருலிங்கநாதனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி. சந்திரசேகரனும் கலந்து சிறப்பித்ததுடன் யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபையின் உப தலைவர் ப. கேசவதாசன், கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் அங்கத்தவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.