25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனாவை சமாளிக்க உலக வங்கி நிதியுதவி

கொரோனா சவாலை சமாளிக்க வளரும் நாடுகளுக்கு இதுவரை இல்லாத வகையில் 15 மாதங்களில் 12 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ் வங்கியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அவ் அறிக்கையில்
உலக நாடுகள் இதற்கு முன் பார்த்திராத வகையில் கொரோனா பிரச்னையை சந்தித்துள்ளன. அதேபோல கொரோனா சவாலை சமாளிக்க இதுவரை இல்லாத அளவிற்கு உலக வங்கி நிதியுதவி செய்துள்ளது.
கொரோனா பாதித்த வளரும் நாடுகளின் சுகாதாரம் பொருளாதாரம் சமூக நலன் ஆகியவற்றுக்கு உலக வங்கி 15 மாதங்களில் 12 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் அளிக்கப்பட்ட நிதியுதவியை விட 60 சதவீதம் அதிகம். வளரும் நாடுகளின் பொருளாதாரம் மீட்சி அடையும் வரை உலக வங்கி தொடர்ந்து உதவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles