மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பவள மல்லிகை முன்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்வுகள்
சிறப்பாக நடைபெற்றது.
முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுளும் நடாத்தப்பட்டன.
முன்பள்ளி ஆசிரியர் கா.கவிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் ஆர்.சர்வேஸ்வரன்,
சமூர்த்தி மகா சங்க அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் என்.கீதா மற்றும் விநாயகபுர பொது நுலகத்தின் நூலக பொறுப்பாளர் ஏ.அருமைநாயகம் ஆகியோர்கள்
அதிதிகளாக கலந்து கொண்டனர்.