31 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோழி உற்பத்தியாளர்களுடன் விலை குறைப்பு மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று கலந்துரையாடல்

இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு , விவசாய அமைச்சு , உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்து இன்றைய சந்திப்பின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.ஏற்கனவே இலங்கையில் உள்ளுர் சந்தையில் முட்டை விலை உயர்வு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.இதனிடையே, கடந்த வாரம், தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.1,250க்கு விற்பனை செய்ய, கோழித் தொழில் சங்கம் ஒப்புக்கொண்டது.
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 91 மில்லியன் முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியின் விலை குறைக்கப்படாவிட்டால், நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அமைச்சர் அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், 3.42 மில்லியனுக்கும் அதிகமான குஞ்சுகள் பண்ணைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், டிசம்பரில் முட்டை உற்பத்தி வேகமாக அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக முட்டையின் விலை ரூபா 30 மற்றும் 35. வரை குறையும் என்றும் முட்டை உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.கைத்தொழிலைப் பாதுகாப்பதுடன், நுகர்வோரின் நலன்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 10 நாளாக இன்றும் தொடர்ந்தது..

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 10 வது நாளை எட்டியுள்ளது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 10 நாளாக இன்றும் தொடர்ந்தது..

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 10 வது நாளை எட்டியுள்ளது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த...

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி. இப்பகுதியின் ஷெரீப்...

ஆடைத்தொழிற்சாலை விடுதியில் ஐஸ் விற்பனை – ஐவர் கைது

ஹோமாகம, நியந்தகல பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை விடுதிக்குள் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவரை ஹோமாகம பொலிஸார் இன்று (24) அதிகாலை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...