கண்டி ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில், கோழி பண்ணையொன்றிலிருந்து 240 கோழிகள் காணாமல் போயுள்ளதாக ஹத்தரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கோழி பண்ணையில் 2000 கோழிகள் இருந்ததாக கோழி பண்ணையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.