32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சஜித்துக்கு அவசர கடிதம் அனுப்பிய ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
‘சம்பிரதாய அரசியலில் இருந்து விலகுவோம், ஆட்சியில் பொறுப்பேற்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன்வாருங்கள்’ என்று சஜித்திற்கு, ரணில் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, இந்த தருணத்தில் கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles