இந்தியாவில் இடம்பெற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற வடக்கு மாகாண மாணவர்கள், இன்று கௌரவிக்கப்பட்டனர்.
மதுரையில் இடம்பெற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில், முதல் இடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில், மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயம் முன்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து, சிவலீமன் சிலம்ப கழக மாணவர்கள் மற்றும் பாபு இஷின்ரியூ கராத்தே பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கிய 20 பேர் கொண்ட குழு, சர்வதேச ரீதியிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் பங்குபற்றியது.
போட்டிகளில் பங்குபற்றி 36 முதல் பரிசுகளையும், 8 இரண்டாவது பரிசுகளையும், 5 மூன்றாவது பரிசுகளையும் பெற்றதோடு, 95 கேடயங்களையும் பெற்றுக்கொண்டது.
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வருகை தந்து, இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில், கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.