26 C
Colombo
Thursday, March 23, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிலம்பரசன் நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

சிலம்பரசன் நடிப்பில் தயாராகி இம்மாதம் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாக இருக்கும் ‘பத்து தல’ எனும் திரைப்படத்திலிருந்து ‘நினைவிருக்கா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் என். கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல’. இதில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாரூக் ஜே. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘நினைவிருக்கா…’ என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. 

பாடலாசிரியர் கபிலன் எழுதியிருக்கும் இந்த பாடலை ஏ ஆர் ரகுமானின் வாரிசும், பாடகருமான ஏ. ஆர். அமீன் மற்றும் பாடகி சக்திஸ்ரீ கோபாலனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். அமீன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் தோன்றியிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

மெல்லிசையும், காதலும் கலந்த இந்தப் பாடல் வெளியான பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது

Related Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ். வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு, கொலை மிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்சியாக,...

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக, 61 பேர் பாதிப்பு

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...