சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை நேரடியாக காண உறவினர்களுக்கு விசேட அனுமதி – காமினி பி.திஸாநாயக்க

0
15

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்படி கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்கமைய உரிய பாதுகாப்புகளுடன் திறந்த முறையில் சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாகவே கைதிகளை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கைதிகளை பார்வையிட வரும் உறவினர்கள் உணவு, இனிப்பு மற்றும் சுகாதார பொருட்கள் ஆகியவற்றை ஒருவருக்கு தகுந்த அளவில் மாத்திரம் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சிறைச்சாலைகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார விதி முறைகளுக்கமைய கைதிகளை காண்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.