சுழிபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து! மாணவன் உயிரிழப்பு!!

0
31

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 18 வயது மாணவன் ஒருவர் பலியானார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு மாணவர்கள் இன்று காலை வகுப்புக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து சம்பவித்தது.

இந்த நிலையில், இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு மாணவன் உயிரிழந்தார். மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.