27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 7 பேர் கைது

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கமம் பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைப்பில் சூதாடிய நிலையில் நாலாம் கட்டையை சேர்ந்த 36 மற்றும் 32 வயதுடைய இரு பெண்களும், பாலையூற்றுவைச் சேர்ந்த 45 மற்றும் 37 வயதுடைய இரு பெண்களும், சங்கமம், பாலையூற்று, கிண்ணியா – 1 பிரதேசங்களைச் சேர்ந்த 37, 54, 58 வயதுடைய ஆண்களும் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சீனன் குடா பொலிஸ் விஷேட பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 28,500 ரூபா பணமும் 45 வயதுடைய பெண்ணின் உடம்புக்குள் இருந்து 70,000 ரூபா பணமும் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பற்ற பணத்தையும் தலைமையகப் பொலிஸ் வசம் ஒப்படைத்ததாக மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதுடன் போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபடுவதாக தெரிவித்ததுடன் அவர்களையும் பணத்தையும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் அணியில் சேர வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது.காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்;.எம்.ஸாஜஹான் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் அணியில் சேர வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது.காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்;.எம்.ஸாஜஹான் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக இன்று நடைபெற்றது.பழைய இயக்குனர் சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய இயக்குனர் சபையானது அண்மையில் தெரிவு...

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பது வருடகால பூர்த்தியை முன்னிட்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் தலைமையில் நடைபெற்ற...