31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்தப் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில், பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை நகரைச் சேர்ந்த வீரமலை மலர்விழி (வயது 52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 27ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சமுர்த்தி அட்டை, குடை மற்றும் காலணி (சிலிப்பர்) ஆகியன கடந்தவாரம் டெவன் நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்ததா தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles