31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை!

நுவரெலியா திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்புளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் இருந்து, பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 53 வயதுடைய வீ.மலர்விழி
என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் ஜூலை மாதம் 26ஆம் திகதி காணாமல் போனதாக பத்தனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், காணாமல் போன பெண் தொடர்பாக எதுவிதமான தகவல்களும்
கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் நீர்வீழ்ச்சியில் சுமார் 200 அடி பள்ளத்தில் நீரில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட சடலம் ஜூலை மாதம் காணாமல் போன பெண்ணின் சடலம் என உறவினர்களால் அடையாளங்காணப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான விசாரணைகளை திம்புளைப் பத்தனைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles