24 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 52 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்

கிளிநொச்சி, முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 52 பேர் சொந்த இடங்களிற்கு இன்று (09) அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் டுபாயில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் 14 நாட்கள் கிளிநொச்சி முழங்காவிலில் உள்ள 65 வது படைப் பிரிவின் படையினர் பயிற்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன். குறித்த கண்காணிப்பு காலத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் கண்காணிப்பு காலம் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவர்களிற்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்திருந்தனர்.

இதன்போது அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த இரணைமடு இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் உடனான நிலை காணப்படுகின்றது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நீங்கள் இங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்புகின்றீர்கள்.

நாட்டில் தற்போதுஉள்ள சூழலை கருத்தில் கொண்டு மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். எம்மை பாதுகாப்பதன் ஊடாக நாட்டின் அனைத்த சமூகத்தையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும். இங்கிருந்து 14 நாட்களை நிறைவு செய்து வீடு திரும்பும் நீங்கள் சுய தனிமைப்படுத்தல் காலமாக மேலும் 14 நாட்கள் வீடுகளில் தங்கியிருத்தல் வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருடன் படையினரும் விரைவாகவும், அவதானமாகவும் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டை நேசிக்கின்ற அனைவரும் இணைந்து குறித்த ஆரபத்தில் இருந்து நாட்டையும், சமூகத்தையும் பாதுகாக்க ஒன்று சேர்வதன் ஊடாக இலகுவாக வெற்றி காண முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து அவர்கள் விசேட பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

புத்தளத்தில் ஒரு வாரத்தில் 4098 கிலோ பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம்...

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தளத்தில் ஒரு வாரத்தில் 4098 கிலோ பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம்...

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...