30 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 52 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்

கிளிநொச்சி, முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 52 பேர் சொந்த இடங்களிற்கு இன்று (09) அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் டுபாயில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் 14 நாட்கள் கிளிநொச்சி முழங்காவிலில் உள்ள 65 வது படைப் பிரிவின் படையினர் பயிற்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன். குறித்த கண்காணிப்பு காலத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் கண்காணிப்பு காலம் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவர்களிற்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்திருந்தனர்.

இதன்போது அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த இரணைமடு இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் உடனான நிலை காணப்படுகின்றது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நீங்கள் இங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்புகின்றீர்கள்.

நாட்டில் தற்போதுஉள்ள சூழலை கருத்தில் கொண்டு மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். எம்மை பாதுகாப்பதன் ஊடாக நாட்டின் அனைத்த சமூகத்தையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும். இங்கிருந்து 14 நாட்களை நிறைவு செய்து வீடு திரும்பும் நீங்கள் சுய தனிமைப்படுத்தல் காலமாக மேலும் 14 நாட்கள் வீடுகளில் தங்கியிருத்தல் வேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருடன் படையினரும் விரைவாகவும், அவதானமாகவும் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டை நேசிக்கின்ற அனைவரும் இணைந்து குறித்த ஆரபத்தில் இருந்து நாட்டையும், சமூகத்தையும் பாதுகாக்க ஒன்று சேர்வதன் ஊடாக இலகுவாக வெற்றி காண முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து அவர்கள் விசேட பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக ...

எரிபொருள் விநியோகம் வழமைபோன்று இடம்பெறுகின்றது

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள்...

அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தலின், 11ஆம் நாள் இன்று

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தலின், 11ஆம் நாள் இன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், முன்னணியின் யாழ்ப்பாண...