தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி, போராளிகள் நலன்புரிச் சங்கம் முன்னெடுத்து வரும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம்
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும், மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தில், மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மழைக்கும் மத்தியிலும் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து கையெழுத்துப்போராட்டத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.