பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், அதற்குப் பின்னால் அரசியல் கைகள் இருப்பதால் உரிய விசாரணைகள் நடைபெறவில்லை என சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார். லசந்த விக்ரமதுங்க மற்றும் கீத் நொயர் மரண விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் கொலையில் அரசியல் தலையீடு உள்ளது. ஷாப்டருக்கும் அதே நிலை தான் வரும். தினேஷ் ஷாப்டர் கொலை பின்னணியில் அரசியல் கை உள்ளது. இதன் காரணமாக உரிய விசாரணைகள் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.