31 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திலினி பிரியமாலி தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் தலைவரிடம் வாக்குமூலம்

பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் நேற்று சுமார் மூன்று மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளது. திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை, முன்னெடுக்கும் வகையிலேயே இந்த வாக்குமூலம் பெறப்படுள்ளது. இந்த பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திரைப்படக் கலைஞர்கள் போன்ற பல முக்கியப் பிரமுகர்களிடம் இருந்து இதுவரை, குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் சந்தேகநபரான பிரியமாலி 2 ஆயிரத்து 510 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரியமாலியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தனர். மோசடி தொடர்பில், திலினி பிரியமாலி, இசுரு பண்டார, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரல்லே சிறிசுமண தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles