29 C
Colombo
Thursday, June 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

நந்தலால் வீரசிங்கவின் எச்சரிக்கை?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எவரும் எதிர்கொள்ளாத நெருக் கடிகளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்கொண்டு வருகின்றார். நந்தசேன கோட்டபாய ராஜபக்ஷ, தொடர்பில் முன்னரோ, ஓர் அச்சம் கலந்த மரியாதையொன்று சிங்களவர்கள் மத்தியிலிருந்தது. ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாகிவிட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதிக்கு இரண்டு வார காலக்கெடு வழங்கியிருக்கின்றார். இரண்டு வாரங்களுக் குள், அரசியல் முரண்பாடுகளை போக்கி, ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்காது போனால், தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக, அவர் தெரிவித்திருக்கின்றார். ஏனெனில், நாடு அரசியல் முரண்பாட்டுக்குள் சிக்குமானால், பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் – நிலை மைகளை சமாளிக்க முடியாமல் போகுமென்றும் அவர் குறிப்பிட்டி ருக்கின்றார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவர், ஜனாதிபதிக்கு எச்சரிக்கைவிடுப்பது இதுவே முதல்தடைவையா கும். அந்தளவிற்கு நிலைமை பாரதூரமாக சீர்கெட்டிருக்கின்றது. மத்திய வங்கியின் ஆளுநர் சுயாதீனமாக இயங்கினால் மட்டும்தான், அவரால் நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்காக செயலாற்ற முடி யும். அதற்கு ஸ்திரமானதொரு அரசாங்கம் தேவை. இந்த நிலையில் தான், அவர் இவ்வாறானதொரு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.
கொரோனா பெருந்தொற்றிற்கு பின்னர், பல்வேறு நாடுகளும் பொரு ளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இலங்கையும் இதில் ஒன்று. ஆனால் இலங்கை போன்று, ஏனைய நாடுகள் வங்குரோத்து நிலைக்கு செல்லவில்லை. ஏனெனில், அந்த நாடுகளிலும் அனைத்து அரசியல்வாதிகளும் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும்தான் இருந்த னர் என்றில்லை. அங்கும் பிரச்சினைகள் இருந்தன – அரசியல் முரண் பாடுகள் இருந்தன. ஆனாலும் அவர்கள் வங்குரோத்து நிலைமைக்கு
செல்லவில்லை. ஆனால் இலங்கை மட்டும் இதில் எவ்வாறு விதிவிலக்கா னது?
ஆரம்பத்திலிருந்தே, நிலைமைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை விடவும், பிரச்னைகளை எவ்வாறு தற்காலிகமாக பூசிமெழுகுவது என்ப திலேயே, ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினர். அண்ண னிற்கு பதிலளிப்பது, தம்பிக்கு பதிலளிப்பது, மகனுக்கு பதிலளிப்பது – என்னுமடிப்படையிலேயே, ராஜபக்ஷக்களின் நிர்வாகம் அமைந்திருந் தது. அதன் விளைவையே தற்போது நாடு மோசமானதொரு சூழலுக்குள் சிக்குற வேண்டியேற்பட்டது. இறுதியில் வன்முறையை தூண்டிவிடு
வதன் மூலம் அதிகாரத்தை தக்கவைக்கும் கடைநிலை அரசியலிலேயே, மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்தார். குறுகிய இனவாத அரசியலில் மூலம், அரசியலை நிரந்தரமாக நிர்வகிக்கலாம் என்னுமடிப்படையிலேயே, ராஜபகஷக்கள் செயற்பட்டனர். இதன், விளைவாகவே நாடு மோசமான தொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.
ஒருபுறம் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பிறிதொரு புறம் நாட் டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான எந்தவொரு மார்க்கமும் தெளிவாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க முடியவில்லை.
ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு ஸ்திர மான அரசாங்கத்தை உருவாக்காது விட்டால், தான் பதவிலிருந்து விலக வுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்குமளவிற்கே நிலைமை கள் இருக்கின்றன. மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர், தனது கல்வியிலும், தனது தனிப்பட்ட மதிப்பிலும் அக்கறை கொண்டிருக்கின் றார். வெறும் பதவியை அவர் அலங்கரிக்க விரும்பவில்லை.

Related Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு...