28 C
Colombo
Wednesday, March 22, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’ பட குறு முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமான நாக சைதன்யா தமிழில் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘கஸ்டடி’ எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘மாநாடு’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘கஸ்டடி’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இந்த  திரைப்படத்தில் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, சம்பத்ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

அரசியல் கள பின்னணியில் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாசா சித்தூரி பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் காட்சி துணுக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாக சைதன்யாவின் கதாபாத்திரமும், தோற்றமும், சண்டை காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் அரவிந்த்சாமி, சரத்குமார் ஆகியோரின் கதாபாத்திரமும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தின் இறுதியில் ‘கஸ்டடி’ திரைப்படம் மே மாதம் 12ஆம் திகதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ். வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு, கொலை மிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்சியாக,...

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக, 61 பேர் பாதிப்பு

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...