படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரெவி எல்லயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காமினிபுர, ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23,30 வயதுடைய சகோதரர், சகோதரியே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுன.
இச்சம்பவம் தொடர்பில் படல்கும்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.