27 C
Colombo
Wednesday, April 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜீன் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் தற்போதைய நிலை காரணமாகவும், திருகுமார் நடேசன் சுகவீனம் காரணமாகவும் மன்றில் முன்னிலையாகவில்லை என அவர்களது சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles