28 C
Colombo
Tuesday, September 26, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும்: அகிலவிராஜ் காரியவசம்

பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின்; பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக சட்டப்பூர்வமாக பதவியேற்ற சந்தர்ப்பம் இதற்கு முன்னர் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றதில்லை.
பிரேமலால் ஜயசேகர என்ற குற்றவாளியை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க பல தரப்பினர் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.
இந்த நீதிமன்றம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த நியமனத்தின் சட்ட அங்கிகாரம் மற்றும் அங்கிகாரமற்ற தன்மை குறித்தோ அல்லாது அவரது தகுதியற்ற தன்மை குறித்து கேள்விக்கு உட்படுத்தாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாராளுமன்ற அமர்வு மற்றும் வாக்களிப்பு போன்ற விடயதானங்கள் இந்த நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்பதுடன் இந்த நெருக்கடிக்கான தீர்வை சபாநாயகர் அல்லது வேறு நீதிமன்றில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள முடியும் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
இதே தன்மையுடைய சரத் பொன்சேகாவின் வழக்கில், அரசியலமைப்பிற்கு அமைவாக சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்புரிமையை பெற தகுதியற்றவராக சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தீர்வை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்று செயற்பட்டிருக்கவில்லை. அவ்வாறானதொரு சட்ட தன்மையும் அங்கில்லை.
எனவே பிரேமலால் விடயத்தில் சபாநாயகர் தனது தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு அல்லாது பாராளுமன்றத்தின் உயரிய தன்மையை சீரழித்து செயற்படும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார

Related Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தை காட்டி 7 மில்லியன் ரூபா கொள்ளை

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர்...

மஹிந்தானந்த,ரோஹித ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றமை தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த...