புங்குடுதீவு கொரோனா தொற்றாளியான பெண் பயணித்த பருத்தித்துறை பஸ்ஸில் பயணித்த பயணிகளில் பருத்தித்துறை தும்பளை ஐயனார்கலட்டியைச் சேர்ந்த 5 பயணிகள் பருத்திததுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அறிமுகமானதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு கொரோனா நோயாளி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பருத்தித்துறை-கொழும்பு பஸ் வண்டியில் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்திருந்தார். அவர் ஞாயிறு அதிகாலை 4. 30 மணியளவில் கொடிகாமம் வந்து இறங்கினார்.
ஆகையால் பருத்தித்துறை பஸ் வண்டியில் பயணித்தோருக்கு கொரனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் துன்னாலை, நெல்லியடி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் இறங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகளை சுகாதாரத் திணைக்களத்தில் அறிமுகமாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
எனினும் பருத்தித்துறையைச் சேர்ந்த 5 பயணிகள் மாத்திரம் அறிமுகமானார்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.