பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதத்துக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கு 87 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
வெட்டுப்புள்ளி தயாரிக்கும் பணியை விரைவுபடுத்த பல பல்கலைக்கழகங்களில் இருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.