ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் நியூ வேலி சுற்றுவட்ட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது நேற்று மரம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மரம் முறிந்த நேரத்தில் பஸ்ஸில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்ததால் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.