ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்று (2) காலை இடம்பெற்றது.
தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகள் சில தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில் அது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.