பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி நீதவான் நீதிமன்றல் அவர் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.