யாழ்ப்பாணம் பொம்மைவெளி மக்களின் போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதனால், இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
காலை 10 மணியளவில், உடுவில் சுன்னாகம் தெற்கு கிராம சேவகர் பிவிவுக்குற்பட்ட சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் 81 குடும்பங்களை சேர்ந்த 259 பேர் வசித்து வருகின்றார்கள்.
1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களே 30 வருடங்களாக நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர்.
நலன்புரி நிலையத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அங்கு வசித்துவரும் மக்களுடைய கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
இதன்போது தங்களுடைய சொந்த காணிகளில் சென்று வாழ்வதற்கான எற்பாடுகளை செய்து தருமாறு மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் நல்லதொரு முடிவினை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் மக்களிடம் உறுதியளித்தார்.