33 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்- சரத் வீரசேகர எம்.பி

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கின்றது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 09ஆவது பிரிவில் பௌத்தத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பௌத்தசாசனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்தர்கள் என்ற முறையில் ஏனைய சகல மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களது வழிபாடுகளுக்கும் நாம் சுதந்திரம் அளித்துள்ளோம். எமது நாடு பௌத்த நாடு என்ற போதிலும் நாட்டில் எந்தளவு இந்து கோவில்கள் காணப்படுகின்றன.

பள்ளிவாயல்கள் காணப்படுகின்றன. கத்தோலிக்க தேவாலயங்கள் காணப்படுகின்றன. எனினும் நாங்கள் இவ்வாறான மனப்பாங்கில் இருந்தாலும் வடக்கில் சில பிரிவினைவாத தலைவர்கள் வடக்கில் புத்தசாசனத்துக்கு இடமளிப்பதில்லை. கௌரவம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles