மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா, கருவேப்பங்கேணி சன்பிளவர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் பிரதான ஆசிரியர் விநாயகமூர்த்தி ரஜினி தலைமையில் விளையாட்டு விழா இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பங்கேற்றார்.
பாலர்களின் கண்கவர் உடற்பயிற்சிக் கண்காட்சியும் இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் பரணிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி
தலைவர் சுரேஷ்குமார், கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர் யோனெலாமாறி, சன் பிளவர் விளையாட்டு கழகத்தின் தலைவர் அன்ரனிதாஸ், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்
காந்தராஜா, ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய பரிபாலனசபை தலைவர் ஜயக்குமரன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.